உலகம் வியக்கும் 41 அறிவிப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக அரசுப்பள்ளியில் கொண்வருவதாக அறிவித்தனர் ஆனால் கடந்த கல்வி மான்ய கோரிக்கையில் அந்த அறிவிப்பும் கானல் நீராய் போனது கணினி ஆசிரியர்களுக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும்..
புதியபாடத்திட்டம் குறித்து
ஜகோர்ட்டில் அறிக்கை தாக்கல் :
புதிய பாடத்திட்டம் குறித்த அறிக்கை
24/08/2017.
நீதிபதி கிருபாகரன் தலைமையில் விசாரணைக்கு வந்த போது மதிப்புமிகு கல்விச்செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில் மாநிலத்தின் புதியபாடத்திட்டம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை விட சிறப்பாக அமையும் வகையில் 6ம் வகுப்பிலிருந்து 10வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை இணைத்து புதியபாடத்திட்டம் வகுக்க மாநில கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி மையத்திறக்கு ஆலோசனை வழங்கியுள்ளது..இதுவும் கூட பொய்த்து போனது .ஏழை மாணவர்களின் கணினி அறிவியல் பாடத்திட்டதில் வரைவு அறிக்கையில் கூட வெற்று அறிக்கையாக போனது.
கணினி அறிவியல் பாடம் குறத்து
28/7/2017 அன்று முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டது அந்த மனுவிற்கு பதில் மனு தந்த முனைவர் K.S.மணி துணை இயக்குநர் (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) அவர்கள் கணினி அறிவியல் பாடத்தை 3ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தில் சேர்ப்பதற்க்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார் .
முதல்வர் தனிப்பிரிவு பதில் மனு.
வரைவு பாடத்திட்டத்தில் தமிழக கல்வித்துறை மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் காத்திருந்த வேலையில் கணினி அறிவியல் பாடம் துணைப்படமாக இணைத்துள்ளது. அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக் கும்
நீண்ட நாள் போராடி வரும் 40000 கணினி ஆசிரியர்களக்கும் ஏமாற்றத்தை தரும் வகையில் அமைந்துள்ளது .
மாணவர்கள் எதிர்கால வாழ்வில் அங்கமான கணினி அறிவியல் பாடத்தை துணைப்படமாக இணைத்துள்ளது.பருவத்திற்கு இரண்டு பாடமாகவும் மூன்று பருவத்திற்கு ஆறு பாடமாக கொண்டுவந்துள்ளது.செய்முறை பயிற்சியின்றி வெறும் பாட்த்தை கற்றுக் கொண்டு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நினைக்கிறது மாண்புமிகு அரசு.
No comments:
Post a Comment